சபாநாயகர் பதவி விலக வேண்டியதில்லை: NPP திட்டவட்டம்!
சபாநாயகர் பதவி விலகமாட்டார் என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க Nihal Abeysinghe தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்தவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் பதவி விலகவேண்டும் என எதிரணி வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பு பேரவையின் தலைவரான சபாநாயகர், இந்த விசாரணையை கருத்தில் கொண்டு பதவி விலக வேண்டும் எனவும் அழுத்தம் கொடுத்தப்பட்டுவருகின்றது.
இந்நிலையிலேயே தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“ குற்றச்சாட்டை எவரும் சுமத்தலாம், அதற்காக பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.
விசாரணை நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியாகிய பின்னர் தான் எந்த தீர்மானமும் எடுக்கப்படும் .” என்றும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க மேலும் கூறினார்.





