ஈரான் அமெரிக்கா இடையே போர் மூளுமா? கசிந்த இரகசிய தகவல்!
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் ஓமனில் இடம்பெற்ற சந்திப்பு நல்லவொரு ஆரம்பத்தை தந்துள்ளதாக வெளியுறவு செயலாளர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ள போதிலும் மறைமுகமாக இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருவதாக மேற்குலக நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே இடம்பெற்ற மறைமுக சந்திப்புகள் இதனை புலப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக தெஹ்ரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை போருக்குத் தயாராகி வருவதாக தோன்றியதால், அமெரிக்க போர் இயந்திரம் மோதலுக்குத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கமைய தெஹ்ரானில் சாலை தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தகவல்கள் தொடர்பில் மிரருக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பிரிட்டிஷ் தளபதியும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆலோசகருமான கர்னல் ரிச்சர்ட் கெம்ப் (Colonel Richard Kemp), ஜனாதிபதி டிரம்ப் கணிக்க முடியாதவர். ஆனால் ஈரானுக்கு இது ‘ஐந்து முதல் நள்ளிரவு வரையிலான தருணம்’ என்று தெரிவித்துள்ளார்.




