இலங்கை

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபரும் வைத்தியசாலையில்!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கடைசி நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்து வரும் தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளக் கோரி, இலங்கை பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியது.

ஏழு நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை.

இதற்கிடையே நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய போராட்டத்தை நடத்தப்போவதாக இலங்கை பள்ளி மேம்பாட்டு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!