மத்திய பட்ஜெட் – 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அது 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பட்ஜெட் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
மக்களவையில் 2026-27 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த பட்ஜெட் மகளிரை ஏராளமான துறைகளில் வலுப்படுத்தும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
எதிர்கால வளமான இந்தியாவுக்கு அடித்தளத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏராளமான வாய்ப்புகளை பல்வேறு துறைகளில் ஏற்படுத்தும் என்று பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்ஜெட் சிறப்புமிக்கது என்று குறிப்பிட்டிருக்கிறார்.





