ரணில், சஜித் ஒன்றிணைவால் அச்சத்தில் அரசு!
ஐக்கிய தேசியக் கட்சியும் UNP, ஐக்கிய மக்கள் சக்தியும் SJP ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார t Ranjith Madduma Bandara தெரிவித்தார்.
இந்த இணைவானது அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“ கட்சி ஆதரவாளர்கள், தொண்டர்களின் கோரிக்கைக்கமையவே இணைந்து செயல்பட இரு தரப்பினரும் இணக்கத்துக்கு வந்துள்ளனர்.
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் எமது பலம் தெரியவரும்.” – என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டார்.
இரு தரப்பு இணைவு தொடர்பில் நீண்டகாலமாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்தாலும், இணைவுக்குரிய கால எல்லை இன்னும் அறிவிக்கப்படவில்லை.





