அரசியல் இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக 30 திகதி போராட்டம்!

கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் இப்போராட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் கலந்துரையாடல் நடத்தின.

வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நடந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியலிங்கம், ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், வரும் 30ஆம் நாள் நெடுங்கேணியில் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!