உலகம்

நியூசிலாந்தில் நிலச்சரிவு – 02 பேர் பலி, பலர் மாயம்!

நியூசிலாந்தில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால குழுவினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல் நிலச்சரிவு இன்று அதிகாலை 4.50 மணியளவில் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள வெல்கம் பே  (Welcome Bay) என்ற இடத்தில் பதிவானது.

மவுண்ட் மவுங்கானுய்  (Mount Maunganui) அடிவாரத்தில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை விடுமுறை பூங்கா அமைந்துள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

நியூசிலாந்தில் வரலாறு காணாத கனமழை ; மண்சரிவில் பலர் மாயம்

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!