யாழில் ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று பின்னர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடத்தனை பகுதியைச் சேர்ந்த நிறோஜன் என்ற 31 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)