இலங்கை செய்தி

கஞ்சாவுடன் சிக்கிய அரசியல்வாதி: யாழில் பரபரப்பு!

கஞ்சா போதைப்பொருளுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று (30) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே, சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் வைத்து அவர் சிக்கியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய இந்நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையின்போது பிரதேச சபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் இவ்வாறு கஞ்சாவுடன் சிக்கியுள்ள விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!