அரசியல் இலங்கை செய்தி

சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

“தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனையடுத்தே அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பமாகின.

நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? தரமற்ற ஊசியால் இருவர் உயிரிழந்துள்ளனர். இது விடயம் தொடர்பில் அரசாங்க நிறுவனங்கள்மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. இது ஏற்புடையது அல்ல.

அரசாங்கம் மற்றும் துறைசார் அமைச்சர் பொறுப்புகூறவேண்டும். சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும். அதுதான் தூய்மையான அரசியல் கலாசாரமாகும்.

சுகாதார அமைச்சருக்கு எதிராக உள்ள தகவல்கள் திரட்பட்பட்டுவருகின்றன. அதன் அடிப்படையிலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய தரவுகளே தற்போது திரட்டப்பட்டுவருகின்றன.” – என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!