சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே கையெழுத்தான அதிவேக ரயில் ஒப்பந்தம்
சவூதி அரேபியாவும்(Saudi Arabia) கத்தாரும்(Qatar) தங்கள் தலைநகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் பாதையை அமைப்பதற்கான முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது கடந்த காலங்களில் கடுமையான மோதல்களில் ஈடுபட்டிருந்த இரண்டு வளைகுடா நாடுகளுக்கு இடையேயான முதல் திட்டமாகும்.
சவுதி ஊடகங்களில் வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அதிவேக மின்சார பயணிகள் ரயில் ரியாத்தின்(Riyadh) கிங் சல்மான்(King Salman) சர்வதேச விமான நிலையத்தை தோஹாவின்(Doha) ஹமாத்(Hamad) சர்வதேச விமான நிலையத்துடன் இணைக்கும்.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் அல்-ஹோஃபுஃப்(Al-Hofuf) மற்றும் தம்மம்(Dammam) நகரங்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் மணிக்கு 300 கிமீ (186 மைல்) வேகத்தில் செல்லும், மேலும் இரண்டு தலைநகரங்களுக்கு இடையே பயணம் சுமார் இரண்டு மணிநேரம் ஆகும்.
ஆறு ஆண்டுகளில் முடிக்கப்பட உள்ள இந்த திட்டம், ஆண்டுக்கு 10 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் மற்றும் இரு நாடுகளிலும் 30,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்(Mohammed bin Salman) மற்றும் கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி(Emir Sheikh Tamim bin Hamad Al Thani) ஆகியோர் ரியாத்திற்கு விஜயம் செய்தபோது கையெழுத்திட்டனர்.





