என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!
கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்ப புள்ளியே இன்று வைக்கப்பட்டுள்ளது.
எனவே, அடுத்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச போரை முடித்த தலைவர். பொருளாதார நெருக்கடியை சமாளித்த தலைவர் ரணில்.
ஒரு சிறைச்சாலை அல்ல 10 சிறைச்சாலைகளில் அடைத்தாலும் எமது பயணம் தொடரும்.”எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.




