இலங்கை

என்.பி.பி. ஆட்சியை விரட்ட சஜித்துக்கும் அழைப்பு!

கூட்டு எதிரணியின் அடுத்த கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நுகேகொடை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ 76 வருடகாலம் நாட்டை நாம் நாசமாக்கவில்லை. 1965 இல் ஜே.வி.பி. உதயமான பின்னரே நாடு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

எல்லா திட்டங்களையும் அவர்கள் குழப்பினார்கள். எனவே, 76 வருடகால சாபம் நாம் அல்லர். ஜே.வி.பியினர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கையின் ஆரம்ப புள்ளியே இன்று வைக்கப்பட்டுள்ளது.

எனவே, அடுத்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும்.

மஹிந்த ராஜபக்ச போரை முடித்த தலைவர். பொருளாதார நெருக்கடியை சமாளித்த தலைவர் ரணில்.

ஒரு சிறைச்சாலை அல்ல 10 சிறைச்சாலைகளில் அடைத்தாலும் எமது பயணம் தொடரும்.”எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

(Visited 5 times, 5 visits today)

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!