500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீட்டில் வசிக்கும் துணை அமைச்சர் – சிக்கலில் ஆளும்கட்சி!
ஆளும் கட்சியின் துணை அமைச்சர் ஒருவர் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் என்றும், அதை அவருக்கு யார் நன்கொடையாக அளித்தார்கள் என்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன்போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்ற வழக்குகளுக்காக இந்த துணை அமைச்சரை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தக்க வைத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.
இந்த துணை அமைச்சர் இந்த அடுக்குமாடி குடியிருப்பை எப்படி வாங்கினார்? அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை யார் கொடுத்தார்கள்? அர்ஜுன் அலோசியஸ் அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பைக் கொடுத்தாரா? அல்லது அர்ஜுன் அலோசியஸ் போன்ற பணக்கார நண்பரிடமிருந்து வந்ததா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தில் மற்றொரு உயர் அதிகாரி ஒருவர் அடிக்கடி கமிஷன் தேடுவதாகவும் அவர் கூறினார். “சட்டவிரோதமாக கொள்கலன்களை அகற்றுவதில் ஈடுபட்டுள்ள மற்றொரு அமைச்சர் இருக்கிறார். கப்பல் போக்குவரத்து என்ற தலைப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அது அவரை நிரபராதியாக்காது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி பத்திர ஊழல், சர்க்கரை ஊழல் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊழல் பற்றி பேச முடியாது, ”என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த எம்.பி., அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் சில பாதாள உலக நபர்களைச் சார்ந்து இருப்பதாகவும், மற்றவர்கள் கைது செய்யப்படுவதாகவும் கூறினார்.





