இலங்கை

ஜனாதிபதி – தமிழரசு கட்சி சந்திப்புக்கு நாள் நிர்ணயம் – iftamilலிடம் உறுதிப்படுத்தினார் சாணக்கியன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கை தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதியளவில் நடைபெறும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் www. iftamil.com யிடம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றியே இதன்போது கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் விரைவில் சந்திப்பு நடக்கும் எனவும், நல்லிணக்க சமிக்ஞையாக வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் விலகி இருப்பதற்கு தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது எனவும் சாணக்கியன் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சந்திப்புக்குரிய திகதி விபரம் பற்றி அவரிடம் இன்று iftamil வினவியது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(Visited 3 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!