வலுவடைகிறது கொழும்பு, வாஷிங்டன் உறவு!
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தகம் உட்பட இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கலாநிதி போல் கபூரை சந்தித்து பேச்சு நடத்திய வேளையிலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் பெதானி போலஸ் மொறிசனும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை தூதரகத்தின் பிரதி தலைவர் மதுகா விக்ரமாச்சி, தூதரக அதிகாரி சதுரி பெரேரா, பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் துமிந்து அபேவிக்ரம ஆகியோரும் கலந்து இச்சந்திப்பில் பங்கேற்றனர் என தனது முகநூல் பக்கத்தில் மஹிந்த சமரசிங்க பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் வர்த்தக போரில் இலங்கையும் சிக்கியது. எனினும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளால் வரி குறைப்பு இடம்பெற்றது. இதில் தூதுவர் மமஹிந்த சமரசிங்க முக்கிய பாத்திரத்தை வகித்தார்
.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இராஜதந்திர துறையில் மறுசீரமைப்பு இடம்பெற்றது. எனினும், மஹிந்த சமரசிங்கவின் சிறப்பான சேவை கருதி, அவரது பதவியில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.





