பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞர் மரணம்!!
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10 கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று (13) இடம்பெற்றுள்ளது.
மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பேருந்துடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த குறித்த இளைஞர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (19வயது) எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)





