இலங்கை

அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்வே பேரணி – நாமல்!

நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல எதிர்க்கட்சிகள் ஏற்கனவே இந்த விவாதங்களில் இணைந்துள்ளன.

கடந்த காலங்களில், பொதுஜன பெரமுனவிற்குள் மட்டுமே கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன, ஆனால் இப்போது நாங்கள் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் கலந்துரையாடி வருகிறோம்.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கட்டாயப்படுத்துவதே இந்த பேரணியின் நோக்கமாகும்.  அரசாங்கத்தின் கொள்கைகளால் பாதிக்கப்பட்ட பலர் இந்த பேரணியில் இணைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 4 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!