இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு!
வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார்.
“ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார்.
இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், எந்த பொலிஸ் நிலையம் மற்றும் எந்த படைப்பிரிவு போன்ற தகவல்களை முன்வைக்க வேண்டும். அப்போது அது பற்றி தேடி பார்க்கலாம்.
அவ்வாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு கிடையாது.” எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.





