மகளிர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 297 ஓட்டங்கள் குவித்த இந்தியா
2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
அந்தவகையில், நவி மும்பையில்(Navi Mumbai) நடைபெறும் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியை வென்று தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 297 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா(Smriti Mandhana) 45 ஓட்டங்களும் ஷபாலி வர்மா(Shafali Verma) 87 ஓட்டங்களும் இறுதியில் தீப்தி ஷர்மா(Deepti Sharma) 58 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயபோங்கா காகா(Ayabonga Khaka) 3 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)





