உலகம் செய்தி

பறக்கும் விமானத்தில் இந்திய பயணிக்கு ஏற்பட்ட ஆபத்து – உயிரைக் காப்பாற்றிய தாதியர்கள்

இந்தியாவில் இருந்து அபுதாபி நோக்கிச் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் நெஞ்சுவலியால் துடித்த நிலையில், அதில் பயணித்த தாதியர்கள் இருவர் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி கொச்சியிலிருந்து அபுதாபிக்குச் சென்றுகொண்டிருந்த ஏர் அரேபியா (Air Arabia) விமானத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகி உள்ளது.

விமானத்தில் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட பயணியை, கேரளாவைச் சேர்ந்த இளம் தாதியர்கள் இருவர் காப்பாற்றியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Hindustan Times) தகவல் வெளியிட்டுள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த 34 வயதான பயணி நெஞ்சு வலியால் துடித்த வேளையில், அபிஜித் (Abhijith), அஜீஷ் (Ajeesh) ஆகிய தாதியர்கள் ஒன்றிணைந்து பயணிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கியுள்ளனர்.

விமானத்தில் இருந்த மருத்துவரின் மேற்பார்வையில், பயணியைக் காப்பாற்றும் முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகக் குறித்த பயணி உயிராபத்தில் இருந்து தப்பித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபியில் விமானம் தரையிறங்கியதும், அங்கிருந்த மருத்துவக் குழு பயணியைப் பரிசோதித்த நிலையில், அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர்.

உரிய நேரத்தில் முதலுதவி அளித்துக் காப்பாற்றியமைக்காகப் பாதிக்கப்பட்ட பயணியின் உறவினர்கள், தாதியர் இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 7 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி