இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துகளில் 16 பேர் பலி

வடமாகாணத்தில் மே மாதத்தில் நேற்று 29ஆம் திகதி வரையிலான 29 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 10 பேரும் , கிளிநொச்சியில் 03 பேரும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தலா ஒருவருமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் , யாழ்ப்பாணத்தில் அதிகாரிகரித்து செல்லும் வீதி விபத்துக்கள் தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளைய தினம் புதன்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

இதன் போது , போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பில் உறுதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவற்றினை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை