உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் பதிவிற்காக சுட்டுக்கொல்லப்பட்ட 16 வயது சிறுவன்
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் சமூக ஊடகப் பதிவிற்காக இந்துத்துவா அமைப்பின் 16 வயது இளம் தொண்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கட்கர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட டெஹ்ரி கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபரின் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அதிகாரி வருண் குமார் குறிப்பிட்டுள்ளார்.
சூரஜ் நகர் பீட்டல் பஸ்தியைச் சேர்ந்த ஷோபித், இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டதாகக் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)





