இந்தியா செய்தி

கரூர் பிரச்சார கூட்டம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

கரூர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

30 உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்த போதும் பின்னர் மீட்பு நடவடிக்கை மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் எண்ணிக்கை சடுதியாக உயர்ந்தது.

இறுதியாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 31 வயதுடைய கவின் எனும் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தற்போது இவருடன் சேர்த்து 14 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!