Asia Cup – இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் அதிரடி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் பதுன் நிஷாங்கா 22 ஓட்டங்களுக்கும் , குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கமில் மிஷாரா 5 ரன்னிலும், குசால் பெரேரா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தசுன் ஷனகா தாக்குப்பிடித்து சிறப்பாக விளையாடி 37 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 64 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார்.
இறுதியில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.
தொடர்ந்து 169 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹாசன் 61 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.