கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு வெளிநாட்டு இலங்கையர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டு மற்றும் கடவுச்சீட்டு புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் இடம்பெற்றதுடன், அதில் கலந்துகொண்ட குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கடந்த ஜுன் 01ஆம் திகதி முதல் செயற்படுவதாக தெரிவித்தனர்.
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் தங்கள் நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(Visited 38 times, 1 visits today)