செய்தி விளையாட்டு

INDvsENG – இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பிய இந்திய அணி

இங்கிலாந்து, இந்தியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டும், ஆர்ச்சர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து, 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது.

நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 87 ரன்னும், சுப்மன் கில் 78 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 5ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடங்கியது.பொறுப்புடன் விளையாடி சதம் அடித்து அசத்திய கேப்டன் கில் 103 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜடேஜா – வாஷிங்டன் சுந்தர் ஜோடி பொறுப்புடன் விளையாடியதால் இந்திய அணி முன்னிலை பெற்றது. இதன்மூலம் இன்னிங்ஸ் தோல்வியை இந்திய அணி தவிர்த்துள்ளது.

இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. இதன்மூலம் 26 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content