பிரான்சில் இளைஞர்களுக்காக இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, பல பிரெஞ்சு நகரங்கள் இளைஞர்கள் மீது இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளன.
தெற்கில் உள்ள நீம்ஸ் மாகாணம், 16 வயதுக்குட்பட்டவர்கள் “வன்முறைக்கு ஆளாகாமல்” தடுப்பதற்கும் “பதட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கும்” நடவடிக்கைகளைக் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதத்தில் பல துப்பாக்கிச் சூடுகள் பதிவாகியுள்ளன .பட்டப்பகலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கடந்த வாரம் நீம்ஸின் புறநகரில் 19 வயது இளைஞனின் உடல் பகுதியளவு எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை அறிவித்த மேயர் ஜீன்-பால் ஃபோர்னியர், நிலைமை “சகிக்க முடியாததாக” மாறிவிட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் “பயம் மற்றும் பயங்கரவாதத்தின்” சூழலை உருவாக்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடாத சிறார்களைப் பாதுகாக்கும் வகையில் “போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பாதிக்கப்படும் 12 அல்லது 13 வயதுடையவர்களையும்” ஊரடங்கு உத்தரவு பாதுகாக்கும் என்று துணை மேயர் ரிச்சர்ட் ஷீவன் தெரிவித்துள்ளார்.