ஆசியா

சீனாவில் சிறுவர்களின் உணவில் ஈயம் – 200 பேர் மருத்துவமனையில் – அதிர்ச்சியில் பெற்றோர்

சீனாவின் ஒரு பாலர் பாடசாலை கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் ஈயம் கலந்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்களின் இரத்தத்தில் ஈயத்தின் அளவு அத்துமீறியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவுகளை உண்ந்த பிள்ளைகள் வயிற்று வலி, வாந்தி, அலட்சிய நிலை போன்ற உடல் குறைபாடுகளை அனுபவித்தனர். சிலரின் பற்கள் கருப்பாக மாறியதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து, குற்றச்சாட்டுகள் உருவாகிய நிலையில், பாடசாலையின் தலைமையாசிரியர் உட்பட 6 பேருக்கு தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, உணவில் கலக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் நச்சுத்தன்மையுடையவையாக இருப்பதும், அவற்றின் அளவு சீனாவின் தேசிய பாதுகாப்பு அளவை விட சுமார் 2,000 மடங்கு அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

உணவுக்கு நிறம் கூட்டுவதற்காகவே இந்த ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 200 பிள்ளைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பள்ளி உணவின் தரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை பறித்துப் பல்வேறு அளவிலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content