ஆசியா செய்தி

கமராவுக்குள் 2 கிலோகிராம் தங்கம் – வியட்நாமில் பெண்ணை சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி

வியட்நாமுக்குள் கமராவுக்குள் மறைத்து 2 கிலோகிராம் தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் தைவானிலிருந்து வியட்நாமித் தலைநகர் ஹனோய்க்குச் சென்றபோது சம்பவம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கையோடு எடுத்துவந்த பெட்டியைத் தவிர அவரிடம் வேறு எந்தப் பொருள்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

பெட்டி மீது மேற்கொண்ட சோதனையில், அதில் வழக்கமற்ற பொருள்கள் இருப்பதாகத் தெரியவந்தது. விமான நிலைய அதிகாரிகள் பின்னர் பெட்டியை விரிவாகச் சோதித்துப் பார்த்தபோது அதில் 4 கமரா கருவிகளைக் கண்டனர்.

கமரா கருவிகளுக்குள் 12 தங்கக் கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

அவற்றின் மதிப்பு 5.5 பில்லியன் டோங் என மதிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content