பிரான்ஸில் தெரு இசை நிகழ்வில் 145 பேர் மீது தாக்குதல் – இருவர் கைது!

பிரெஞ்சு நாட்டின் வருடாந்திர தெரு இசை விழாவின் போது 145 பேர் மீது ஊசிகள் குத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, பன்னிரண்டு சந்தேக நபர்களை பிரெஞ்சு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் முழுவதும் ஃபெட் டி லா மியூசிக் விழாவிற்காக மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர்,
இதன்போது பலர் ஊசிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் பெண்களாவர்.
நாடு முழுவதும் 145 பாதிக்கப்பட்டவர்கள் ஊசிகளால் குத்தப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது, தலைநகரில் 13 வழக்குகள் பாரிஸ் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)