ஆப்கானிஸ்தானில் நடைமுறைக்கு வந்த தாலிபான்களின் புதிய தடை

தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் தாலிபான் அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மீதான தடை அமுலுக்கு வந்துள்ளதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்தினர்.
“கவனம் செலுத்துதல்” மற்றும் “இஸ்லாமிய சட்டம்” குறித்த கவலைகள் காரணமாக இது நடைமுறைக்கு வந்துள்ளது.
காந்தஹாரில் உள்ள மாகாண கல்வித் துறையின் உத்தரவு, பள்ளிகள் மற்றும் மதப் பள்ளிகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களுக்குப் பொருந்தும்.
“கல்வி ஒழுக்கம், கவனம் செலுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)