மத்திய கிழக்கு

காசாவில் உணவு உதவி பெற முயன்றவர்களை தாக்கிய இஸ்ரேலியக் கவசவாகனங்கள்; 59 பேர் மரணம்

காஸாவில் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகளிலிருந்து உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டிருந்த பாலஸ்தீனர்களை இஸ்‌ரேலியக் கவசவாகனங்கள் குறிவைத்து தாக்கியதில் குறைந்தது 59 பேர் உயிரிழந்தனர்.இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) நிகழ்ந்தது.

கான் யூனிஸ் பகுதியில் உள்ள சாலையில் பல சடலங்கள் கிடப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வலம் வந்தது.

அப்பகுதியில் தனது கவசவாகனங்கள் தாக்குதல் நடத்தியதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக அது தெரிவித்தது.

குறைந்தது 59 பேர் உயிரிழந்ததாகவும் 221 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன மருத்துவ உதவியாளர்கள் கூறினர்.அவர்களில் குறைந்தது 20 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்தோர் கார்கள், ரிக்‌ஷா, கழுதை வண்டிகள் ஆகியவை மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
Skip to content