இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமா? அமைச்சர் விளக்கம்

இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென வெளியாகும் தகவலில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டரை மாதங்களுக்குப் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக, உயர் அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(Visited 5 times, 5 visits today)