விஜய் பற்றி உண்மையை உடைத்த விஜயின் மாமா மகள்

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். 33 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் இவர், தற்போது சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அரசியலுக்கு சென்றுள்ள காரணத்தினால் ஜனநாயகன் திரைப்படம்தான் தனது கடைசி படம் என அறிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்துள்ளது. விஜயின் கடைசி படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.
பிரபல பாடகரும், டப்பிங் கலைஞருமான சுரேந்தர், விஜய்யின் தாய் மாமன் என்பதை நாம் அறிவோம். சுரேந்தருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதில் மகள் பல்லவி சுரேந்தர் அவ்வப்போது தனது அத்தை ஷோபா சந்திரசேகருடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வார். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யின் விருப்பமான உணவு குறித்து பல்லவி சுரேந்தர் கூறியுள்ளார். இதில் “நான் ரொம்ப நாளா அண்ணா கிட்ட இதைத்தான் சொல்றேன், வீட்டு வந்தாருன்னா அவருக்கு தோசை சிக்கன் குழம்பு செஞ்சி தரணும். அவருக்கு அது ரொம்ப பிடித்த உணவு” என கூறியுள்ளார்.