ஆசியா

பாகிஸ்தானில் அணு ஆயுத சோதனையால் நில நடுக்கமா? தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் விளக்கம்

பாகிஸ்தானின் சில பகுதிகளில் நேற்றைய லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது சாதாரண நிலநடுக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இர் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டதல்ல என தேசிய நில அதிர்வு ஆய்வு மைய இயக்குநர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிா் ஜங்கல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாக பதிவானதாகவும் அவா் கூறினாா்.

இது கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கமாகும். முன்னதாக, கடந்த 10-ஆம் திகதியில் பாகிஸ்தானில் இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவை ரிக்டா் அளவுகோலில் 4.7 மற்றும் 4.0 அலகுகளாக பதிவாகின.

இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடைபெற்ற இந்த நேரத்தில் அங்கு வழக்கத்துக்கு மாறாக தொடா்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’ காரணமாக இருக்கலாம் என சிலரும், அணுசக்தி சோதனையை பாகிஸ்தான் மேற்கொண்டதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சிலரும் சமூக வலைதளங்களில் ஊகங்களை பரப்பி வருகின்றனா்.

ஆனால் அணுசக்தி சோதனை மேற்கொண்டிருக்க வாயப்பில்லை என்றும் இது சாதாரண நிலநடுக்கம் என்றும் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

இந்தியா மற்றும் ஐரோப்பிய-ஆசிய டெக்டானிக் தகடுகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைந்துள்ளது. இதனால் பலூசிஸ்தான், கைபா் பக்துன்கவா மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக நிபுணா்கள் கூறியுள்ளனா்.

(Visited 12 times, 12 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்