இலங்கை

கொழும்பில் உயிரிழந்த மாணவி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

கொழும்பு, கொட்டாஞ்சேனை பாடசாலை மாணவியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்ற நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அதேநேரம் எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை என்பது தொடர்பிலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தொடர்பில் எதற்காக உரிய முறையில் தகவல் வழங்கவில்லை என்பது தொடர்பிலும், உரிய பாடசாலையின் அதிபரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தடுப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, காவல்துறை ஆகிய தரப்புகள் அடங்கும் வகையிலான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவம் பதிவாகுமாயின் குறித்த நான்கு நிறுவனங்களும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்