செய்தி விளையாட்டு

IPL Match 52 – சென்னை அணிக்கு 214 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 52ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஆர்சிபி அணியின் ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இவரும் அபாரமான ஆட்டத்த வெளிப்படுத்தினர்.

பெத்தேல் 28 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி ஆட்டமிழக்கும்போது ஆர்சிபி 11.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஆர்சிபி-யின் ஸ்கோர் வேகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டது.

ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்துள்ளது. ரொமாரியோ ஷெப்பர்டு 14 பந்தில் அரைசதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 6 சிக்சர் அடங்கும்.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி