இலங்கை

கொழும்பில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

பாணந்துறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

பாணந்துறை – ஹிரண பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, மோட்டார் சைக்கிளிலி் பிரவேசித்த இரண்டு அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்ததுடன், காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டீ-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை ஹிரண பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்