ஐரோப்பா

பிரான்ஸ் நாட்டில் சிறைச்சாலை மீது குண்டுவீச்சு

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பிரான்ஸ் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக தலைநகர் பாரீஸ் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சிறைச்சாலை மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தின.

அதன்படி இரவு நேரத்தில் சிறையின் வாகன நிறுத்துமிடங்களில் நின்ற கார்களை அவர்கள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் டூலோன் நகரில் உள்ள சிறைச்சாலை மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதித்துறை மந்திரி ஜெரால்ட் டார்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!