இலங்கை

கொழும்பில் பெரும் சோகம் – தாயின் கணவரால் கொலை செய்யப்பட்ட சிறுவன்

கொழும்பில் தனது தாயின், கணவர் எனக்கூறப்படும் நபரினால் தாக்கப்பட்ட 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

50 வயதான சந்தேகநபர், கடந்த 12 ஆம் திகதி மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, மேற்படி, இளைஞரின் தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்போது, மதுபோதையில் வீட்டுக்கு வந்து சத்தம் போடவேண்டாம் என குறித்த சிறுவன் அவரை திட்டியுள்ளார்.

அதனையடுத்து, சந்தேக நபர் இரும்பு கம்பியால் சிறுவனை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எவ்வாறாயினும், அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!