ஐரோப்பா

கருங்கடல் தானிய ஒப்பந்தம் நிறைவு : உக்ரைனை விட்டு வெளியேறும் இறுதி கப்பல்!

தற்போதைய கருங்கடல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் இறுதிக் கப்பல் உக்ரைனை விட்டு வெளியேறவுள்ளது.

DSM Capella என்ற கப்பல்  30,000 டன் சோளத்தை சுமந்து கொண்டு சோர்னோமோர்ஸ்க் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு துருக்கியை நோக்கிச் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐநா தரகு ஒப்பந்தம் கடந்த ஜூலை முதல் உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான ஏற்றுமதிக்கு அனுமதித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நாளை முதல் காலாவதியாகவுள்ளது.

இதனையடுத்து இந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், ரஷ்யா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில், மொஸ்கோவின் படையெடுப்பால் உலகலாவிய ரீதியில்  உணவு நெருக்கடி மோசமடையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்