இந்தியா

இந்தியா: மக்களவை ‘ஜனநாயகமற்ற’ முறையில் நடத்தப்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மக்களவையில் தனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சபை “ஜனநாயகமற்ற” முறையில் நடத்தப்படுகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சபாநாயகர் தன்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததாகவும், தான் பேச வாய்ப்பளிக்காமல் சபையை ஒத்திவைத்ததாகவும், இதேபோல கடந்த வாரத்திலும் தனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து ராகுல் காந்தி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் மக்களவையில் கட்சியின் கொறடா மாணிக்கம் தாகூர் உட்பட சுமார் 70 காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள், மக்களவை சபாநாயகரைச் சந்தித்து, அவையில் ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிராக கேள்வி எழுப்பியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!