தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான நடவடிக்கை – கவலையில் பிரித்தானியா

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது என வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம் என லாமி கூறியுள்ளார்.
பிரித்தானியா மற்றும் உலகப் பொருளாதாரம் இந்த வர்த்தக வழிகள் பாதுகாப்பாக இருப்பதைச் சார்ந்துள்ளது என அவர் குறிப்பிடப்படுகிறார்.
தனது பதிவோடு இணைந்த காணொளியில், “பிலிப்பைன்ஸ் இங்கு ஆபத்தான விளிம்பில் உள்ளது. கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு அடிக்கடி சவால்களை எதிர்கொள்கிறது” என அவர் கூறியுள்ளார்.
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் சீனாவுடனான மோதல்களுக்கு மத்தியில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பு கூட்டாண்மைகளை விரிவுபடுத்தும் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்த பின்னர் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பிரித்தானியாவும் பிலிப்பைன்ஸும் வார இறுதியில் ஒரு கூட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கடந்த மாதம், தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய பகுதியில் ரோந்து சென்ற பிலிப்பைன்ஸ் அரசாங்க விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சீன கடற்படை ஹெலிகாப்டரின் ஆபத்தான சூழ்ச்சிகளை அமெரிக்காவும் கண்டித்தது.