கனேடிய முன்னாள் பிரதமரின் செயல் குறித்து ரைவலாகும் புகைப்படம்

கனேடிய நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் முன்னாள் ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த ஜனவரியில், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, பிரதமராக அவர் தொடருவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மார்க் கார்னி நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், நேற்று புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார்.
தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர் நாடாளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.