ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆஸ்திரேலிய தம்பதியின் Qatar Airways விமானப் பயணம் சடலத்தால் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மிட்செல்லும் ஜெ்னிஃபரும் மெல்பர்னிலிருந்து டோஹாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்கு அருகிலிருந்த பெண் பயணி எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார.
விமான ஊழியர்கள் பெண்ணின் சடலத்தைத் தம்பதியின் அருகே வைத்திருந்தனர். ஜெனிபர் இடம் மாறினார். ஆனால் மிட்செல்லுக்கு வேறு இடம் ஒதுக்கப்படவில்லை.
எஞ்சிய விமானப் பயணம் முழுவதும் அவர் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தும்கூட விமான ஊழியர்கள் அவரது இடத்தை மாற்றவில்லை என்று தம்பதி குறைகூறினர்.
அதுபோக அவர்கள் இருவருக்கும் எந்தவித ஆதரவும் கொடுக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொண்டனர்.
விமானப் பயணம் அவர்களைப் பெருமளவில் பாதித்ததாக ஜெனிபர் கூறினார்.
“விமானத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். சம்பவத்தினால் ஏதேனும் தடங்கலோ சிரமமோ ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கிறோம். பயணிகளைத் தொடர்புகொள்வோம்,” என்று Qatar Airways விமான நிறுவனம் தெரிவித்தது.