ஆசியா

சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண்ணை சுற்றிவளைத்த அதிகாரிகள் – சிக்கிய பெருந்தொகை பணம்

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சிங்கப்பூருக்குள் நுழைந்த போது 20,000 வெள்ளிக்கும் அதிகமான ரொக்கம் வைத்திருந்த பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

உட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடியில் ஏப்ரல் 25ஆம் திகதி அந்த சம்பவம் நடந்தது.

மலேசியரான அந்தப் பெண், கார் மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் போது அதிகாரிகளிடம் பிடிபட்டார்.

பெண் ஓட்டி வந்த கார் மலேசிய வாகனப் பதிவு எண்ணைக் கொண்டது. அவர் பணத்தை பிளாஸ்டிக் பைகளில் கட்டுக்கட்டாக வைத்திருந்ததாக அதிகாரிகள் கூறினர். தற்போது பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிங்கப்பூர் சட்டப்படி சிங்கப்பூரில் இருந்து வெளியே செல்பவர்களோ அல்லது வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைபவர்களோ 20,000 வெள்ளிக்கு அதிகமான ரொக்கம் கையில் வைத்திருந்தால் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

அப்படி மீறினால் குற்றம் செய்பவர்களுக்கு 50,000 வெள்ளி வரையிலான அபராதமோ மூன்று ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

https://web.facebook.com/Immigration.Checkpoints.Authority/posts/551296547191469

 

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!