பெரு ஷாப்பிங் சென்டர் மேற்கூரை விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு அதிகரித்துள்ளது, மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(Visited 4 times, 1 visits today)