ஆசியா

பாகிஸ்தானில் சாலையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு : 09 பேர் பலி!

தென்மேற்கு பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர்  சாலையில் கிடந்த குண்டு ஒன்றின் மீது மோதியதில் குறித்த வாகனம் வெடித்து சிதறியுள்ளது.

இதில் ஒன்பதுபேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலூசிஸ்தான் மாகாணத்தின் ஒரு மாவட்டமான ஹர்னாயில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அரசாங்க நிர்வாகி வாலி கக்கர் தெரிவித்தார்.

இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அதிகாரிகள் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் நாட்டின் வடமேற்கு ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் பலூச் விடுதலை இராணுவ பிரிவினைவாதக் குழு மீது சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 20 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content