உலகம்

சிசிலியன் மாஃபியா மீது பெரிய அளவிலான சோதனையில் 130 பேர் இத்தாலியில் கைது

சிசிலியன் மாஃபியா மீது பெரிய அளவிலான சோதனையில் 130 பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல், கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று காராபினேரி போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

ஏனைய குற்றங்களுக்காக ஏற்கனவே சிறையில் இருந்த 33 சந்தேக நபர்களுக்கு மேலதிக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

செவ்வாயன்று கைது செய்யப்பட்டவர்கள் “கோசா நோஸ்ட்ராவுக்கு மிகவும் கடுமையான அடி” என்று இத்தாலிய பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனி, X இல் பதிவில் பாராட்டினார், மேலும் “மாஃபியாவுக்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை, நிற்காது” என்று தெளிவான சமிக்ஞையை அளித்தார்.

(Visited 4 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்