பைடனுக்கு அமெரிக்காவின் இரகசியம் தெரிய வேண்டிய அவசியமில்லை – டிரம்ப் எடுத்த நடவடிக்கை
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தினசரி உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தகவல்களை அதிகாரப்பூர்வமாக அணுகும் உரிமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நினைவாற்றல் குறைவாக உள்ள முன்னாள் ஜனாதிபதி பைடனுக்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்கள் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஜோ பைடன் ஜனாதிபதியாக இருந்தபோது டிரம்பிற்கும் இதேபோன்ற முடிவு எடுக்கப்பட்டது.





